Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்தவர் ஷாலு தேவி (32). இவர் தனது அண்ணனுடன் கடந்த 5-ம் தேதி பக்கத்து ஊரில் உள்ள கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். அப்போது அவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கார் அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஷாலு தேவியும், அவரது அண்ணனும் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இதை விபத்தாக கருதி வழக்கை முடித்து வைத்தனர். இந்த நிலையில் மனைவியின் உடல் ஒப்ப டைக்கப்பட்டதும் அதை பார்த்து அவரது கணவர் மகேஷ் சந்திரா கதறி துடித்திருக் கிறார். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் மாயமானார். இதையடுத்து, அவரை அங்கிருந்த போலீசார் கண்காணித்த போது, அவர் இன்சூரன்ஸ் அலுவலகத்துக்கு சென்றது தெரிய வந்தது. மனைவி இறந்த ஒரு மணிநேரத்துக்கு உள்ளாகவே அவர் இன்சூரன்ஸ் அலுவலகத் துக்கு சென்றதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. இதன் தொடர்ச்சியாக, மகேஷ் சந்திராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆனால், அவரிடம் நடத்திய விசாரணையில் எந்த உண்மையும் வெளியாகவில்லை. மேலும், அவரது செல்போனையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதிலும் எந்த தகவலும் கண்டறியப்படவில்லை. பின்னர், கடைசியாக மகேஷ் சந்திரா வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்த போதுதான், அவர் மீதான சந்தேகம் உறுதியானது. அந்த சிசிடிவி காட்சியில், அவரது மனைவி ஷாலு தேவி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதும் மகேஷ் சந்திரா உடனடியாக வெளியே ஓடிச் சென்று அங்கு நின்றிருந்த ஒரு காருக்குள் இருந்தவரிடம் ஏதோ சொல்கிறார். பின்னர் அந்த காரும் புறப்பட்டு சென்றது. இதனைத் தொடர்ந்து, மகேஷ் சந்திராவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தனது மனைவியை இன்சூரன்ஸ் பணத்துக்காக திட்டம் போட்டு கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து அவர் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், "என் மனைவிக்கும் எனக்கும் 2015-ம் ஆண்டு திருமணம் ஆனது. எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்தின் போது என் மனைவியின் பெற்றோர் தருவதாக கூறிய வரதட்சணையை கொடுக்க வில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் ஒருகட்டத் தில் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். ஆனால், அப்படி கொலை செய்தால் எனக்கு எந்த லாபமும் இல்லை என்பதை உணர்ந்தேன். எனவே என் மனைவி பெயரில் ரூ.2 கோடிக்கு இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்தேன். இன்சூரன்ஸ் எடுத்து ஒரு வருடம் ஆன பிறகுதான், சம்பந்தப்பட்டவர் உயிரிழந்ததற்கு பிறகு அந்த மொத்த தொகையும் கிடைக் கும். எனவே, அவரிடம் ஒரு வருடமாக அன்பாக இருப்பதை போல நடித்து வந்தேன். இந் நிலையில், கடந்த மாதத்துடன் இன்சூரன்ஸ் போட்டு ஒரு வருடம் ஆகிவிட்டதால், அவரை கொலை செய்ய கூலிப்படையை அமர்த்தினேன். பிறகு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அவரை கோயிலுக்கு செல்ல வைத்தேன். பின்னர் கூலிப்படையினர் காரை ஏற்றி அவரை கொலை செய்தனர்.டிவியில் இன்சூரன்ஸ் விளம்பரத்தைப் பார்த்து இந்த யோசனை வந்தது இவ்வாறு மகேஷ் சந்திரா கூறினார். இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரையும், கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர்.இதற்காக, மனைவியின் நகை களை அடகு வைத்து, முன்பணமாக, 5 லட்சம் ரூபாயும் வழங்கி உள்ளார்.